Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 11 மார்ச், 2013

வறண்டன மூணாறு அருவிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மூணாறு பகுதியில், கோடை மழை இன்றி, வறட்சி நிலவுவதால், நீர் வீழ்ச்சிகள் வறண்டு, சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கேரளாவில், "தென்னகத்து காஷ்மீர்' என, அழைக்கப்படும் மூணாறு, பசுமையான மலைப் பகுதியாகும். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது. ஆண்டு முழுவதும், வெளிநாட்டு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.மூணாறைச் சுற்றிலும் பெரியகானல், ஆற்றுக்காடு, நயமக்காடு, லக்கம், வாளரா, சீயப்பாறை உட்பட, ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்; கோடையிலும், நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படும்.

ஆண்டுதோறும் பிப்ரவரியில் மூணாறு பகுதியில், கோடை மழை பெய்யும். இந்த ஆண்டு, கோடை மழை பெய்யாததால், வறட்சி ஏற்பட்டுள்ளது; நீர் வீழ்ச்சிகள் வறண்டுள்ளன. சோலை வனங்களும், புல் மேடுகளும் பசுமை இழந்து காட்சியளிக்கின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக