Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 மார்ச், 2013

மத்திய அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு


காஞ்சிபுரத்திலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தகவல் தொழிற்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: Assistant Professor

சம்பளம்: ரூ.15,600-39,100

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பி.எச்டி.,யில் (கணினி அறிவியல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் டிசைன்) ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி படிப்பு சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு குளிர்சாதன வசதி பொருந்திய ரயில் கட்டணம் தரப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 வருட ஆராய்ச்சி பணிக்கு ஐந்து லட்சம் உதவித்தொகை, மாதாந்திர தொலைபேசி கட்டணம் மற்றும் மாத சம்பளம் தரப்படும். மேலும் ஆராய்ச்சி தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள், கலந்து கொள்ளும் கருத்தரங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான சான்றுகளின் நகல்கள் ஆகியவற்றை தபாலில் அனுப்ப  ஏப்ரல் 10 கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களுக்கு www.iiitdm.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக