Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 மார்ச், 2013

கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை


திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் மனோ கல்லூரியில் இதுவரை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்த தேர்வு கட்டணம் பட்டமளிப்பு கட்டணம் ஆகியவற்றை வ்ங்கி மூலம் செலுத்த வேண்டும் என திடீரென கூறியதால் மாணவிகளுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. முன்பு போல் கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இது பெண்கள் மட்டுமே பயிலும் மகளிர் கல்லூரியாக செயல்படுகிறது. மாணவிகள் தங்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் அரியர்ஸ் பாடங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை கல்லூரி அலுவலகத்திலேயே செலுத்தி வந்தனர். எல்லா கல்லூரிகளிலுமே இதுதான் நடைமுறையாக உள்ளது.

இந்த ஆண்டு திடீரென அனைத்து கட்டணங்களும் "பதிவாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என கூறிவிட்டனர். இதனால் மாணவிகள் கல்லூரியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.350 வரைவோலை எடுக்க ரூ.31 டிடி கமிஷன் செலுத்தவும் வேண்டியுள்ளது. இதில் தேர்வுக் கட்டணம், அரியர்ஸ் தேர்வு கட்டணம், பட்டம் பெறுவதற்கான கட்டணம் என தனித்தனியாக டிடி எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.93 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் தற்போது கல்லூரி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை போராட்டத்திற்காக காலவரையறையின்றி மூடப்பட்டதாலும் மாணவிகள் தேர்வு கட்டணம் செலுத்த தினசரி வந்து செல்கின்றனர். மேலும் அதற்குரிய படிவம் பல்கலைக்கழகத்திடம் இருந்து வரவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே முன்புபோல் மாணவிகளிடம் கட்டணங்களை கல்லூரியிலேயே வசூல் செய்து மொத்த தேர்வு கட்டணத்தையும் ஒரே வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ பல்கலைக்கழகத்தில் செலுத்த கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக