Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 2 மார்ச், 2013

50 கிராம மக்களை மிரட்டி வரும் யானைக் கூட்டம்!


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு யானைக் கூட்டம் கீழ் பகுதிக்கு இறங்கியது. கல்வராயன் மலையடிவாரமான ரெங்கப்பனூர் கிராமத்தில் இறங்கிய யானைக்கூட்டம் பாப்பாத்தி மூலை, மூணாம் சுனை, மல்லாபுரம், பாவளம், அரசம்பட்டு, புதுப்பாளப்பட்டு, செட்டியாறு, பாச்சேரி, மட்டப்பாறை, எருத்தவாய் நத்தம், பரிகம், அக்ராபாளையம், மூங்கில்பாடி, சின்னசேலம் இந்த கிராமங்களில் ஆங்காங்கே கடந்த 15 நாட்களாக கரும்பு, வாழை, வெங்காயம், நெல் போன்ற விவசாய பொருட்களை சேதப்படுத்தியது.

    எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் விஜயா என்பவர் வீட்டினை இடித்தது. வாட்டர் டேங்கில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு டேங்கை சேதப்படுத்தியது. மாற்றுத்திறனாளியான ஹரிதாஸ் தனது வயலை கண்காணிக்க சென்றுள்ளார். அப்போது யானைக் கூட்டம் நிற்பதை பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் வருவதற்குள் யானைக் கூட்டம் அவரை மிதித்து கொன்றது.

    இதையடுத்து டாக்டர் மனோகரன் தலைமையிலான மாவட்ட வன அலுவலர் ஜெயராமன், வனபாதுகாவலர் கருணைப்ரியா, ரேஞ்சர், கொளஞ்சியப்பன், சேகர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யானைக் கூட்டத்தை பின்தொடர்ந்தனர். யானைக் கூட்டம் மக்கள் வாழும் பகுதிக்கு வந்தது ஏன் என்றும், அதனை திருப்பி காட்டுக்குள் கொண்டு சென்று விடுவதை பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோமுகி ஆற்றைக் கடந்து பொட்டியம் என்ற கிராமத்தை நோக்கி யானைக் கூட்டம் வந்தது. பரிகம் கிராமத்தில் வசிக்கும் வசந்தி என்பவர் வீட்டை முற்றிலும் சேதப்படுத்தியது. பீரோ, கட்டில், டிவியை நொறுக்கியது. சாமிதுரை என்பவர் களத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது. மேலும் 8 பசுமாடுகள், கன்றுக்குட்டிகளை மிதித்து கொன்றது. பின்னர் அக்கராபாளையம் நோக்கி சென்றது. அங்கு பொதுமக்கள் யானைக் கூட்டத்தை உள்ளே நுழையக் கூடாது என்பதற்காக வெடி வெடித்தனர்.

    பின்னர் அந்த யானைக் கூட்டம் சின்னசேலம் நோக்கி வந்தது. அங்கும் பொதுமக்கள் வெடி வெடித்தனர். இதையடுத்து மூங்கில்பாடி நோக்கி சென்றது.

    யானையை பின் தொடர்ந்து சென்ற வனத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, காட்டுக்குள் தண்ணீர் இல்லை. பசுமை இல்லை. அதனால்தான் வெளியே வருகிறது. மூத்த யானைகள் கடந்த காலங்களில் சென்ற வழியை ஞாபகப்படுத்தி தற்போது அதே பாதையில் தான் செல்கிறது. காலப்போக்கில் யானை வழிதடத்தில் நம் மக்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் யானையை திருப்பிக்கொண்டு போய் காடுகளில் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக