Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

செங்கோட்டை - நெல்லை கூடுதல் ரயில் இயக்க முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) வலியுறுத்தல்!


தென்காசி முஸ்லிம் மாணவர் பேரவை செயலாளர் செய்யது அலி பாதுஷா தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் மீட்டர்கேஜ் ரயில் இயங்கும் போது நெல்லை-கொல்லம், நெல்லை - செங்கோட்டை என கூடுதல் சேவை இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிறிய வர்த்தகங்கள் பயனடைந்து வந்தனர்.தற்போது அகல பாதையில் ரயில் சேவை துவங்கியது முதல் அதிகமான மக்கள் பயணிப்பதால் ரயிலின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும் அதிகமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வரும் இந்த வழித் தடத்தில் கூடுதலாக ஒரு ரயில் சேவை மிகவும் அவசியமான தாகவும், தேவையானதாகவும் இருக்கிறது.

ஆகவே பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் ரயில் விடவும், கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகளான பயணிகள் நிழற்குடை, இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி நடை மேடை வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே நெல்லை - செங்கோட்டை வழித் தடத்தில் கூடுதல் ரயில் இயக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக