Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு கடந்த நான்கு மாதங்களில் ஒப்பந்தப்படி 764.16 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் கீழ் வால்பாறை மலைப்பகுதியில் சோலையாறு அணை, மேல்நீராறு அணை,கீழ்நீராறு அணை, அப்பர்õழியாறு மற்றும் காடம்பாறை ஆகிய ஐந்து அணைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் கீழ் நீராறு அணையிலிருந்து, கேரளாவுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பிப்.1ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று அணை கட்டும் போது இருமாநில அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.இதனையடுத்து கீழ்நீராறு அணையிலிருந்து ஒரு மதகு வழியாக கேரளாவுக்கு 764.16 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக