Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 14 பிப்ரவரி, 2013

இந்தியாவில் மனித வளம் கிடைப்பதில் சிரமம்


இந்தியாவில் மனிதவளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பிடிசி இந்தியா நிறுவன தேசிய மேலாளர் ஜெப்ரி வில்மாட் தெரிவித்தார்.

 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் மென்பொருள் கண்காட்சியைத் தொடக்கி வைத்த அவர், பின்னர் பேசியது:
 இந்தியாவில் பொறியியல் கல்வியைப் படிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. கணினி தொடர்பான பட்டப்படிப்பு படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்குச் செல்வதை பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், பல்வேறு வாகனத் தயாரிப்பு தொழில்சாலைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.
 மனித வளம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், வாகனத் தொழில்சாலைகளை இந்தியாவில் தொடங்குவதைவிட சீனாவில் தொடங்குவதையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான் மாணவர்கள் பயனடையும் வகையில், பெங்களூரில் வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் அதற்கான மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டுகளில் மும்பை, சென்னையில் இந்தக் கண்காட்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை (பிப்.13) புணேவில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக