Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 17 ஜனவரி, 2013

இந்தியாவின் ஹீரோ திப்பு சுல்தான் :கர்நாடக கவர்னர் பரத்வாஜ்


இந்தியாவின் ஹீரோவாக கருதப்பட்ட திப்பு சுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கவர்னர் பரத்வாஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக கவர்னர் பரத்வாஜ் மங்களூரில் நேற்று அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவின் ஹீரோ
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்தில் திப்பு சுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு எந்த வித எதிர்ப்பும் தேவையில்லை. திப்பு சுல்தான் இந்தியாவின் ஹீரோவாக கருதப்பட்டவர். அதனால் அவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.கர்நாடக அரசு லோக் அயுக்தா நீதிபதியை நியமிப்பதில் காலதாமதம் செய்து வருவதால் மாநில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இனியும் தாமதம் செய்யாமல் லோக் அயுக்தா நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும்.

கலைக்கும்படி சொல்லவில்லை
ஜெகதீஷ் ஷெட்டர் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்றும், எனவே ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றும் இதுவரை யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை.பசுவதை தடை சட்ட மசோதா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. அங்கிருந்து கடிதம் வந்த பிறகு அதுபற்றி பரிசீலிக்கப்படும்.இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக