Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 28 ஜனவரி, 2013

இளைஞர்களே நாட்டின் பலம்: பிரதமர் மன்மோகன் சிங்

இளைஞர் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு சந்திக்கும் பல்வேறு சவால்களை எளிதாக சமாளிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 டில்லியில் என்.சி.சி., மாணவர்களிடையே பேசிய அவர், "இந்தியா இளைஞர்களின் தேசம். இளைஞர்களே நமது நாட்டின் மிகப்பெரிய பலம். முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இளைஞர்கள் தங்களது உரிமைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களிடையே, நாட்டை சீர்படுத்த வேண்டும் என ஆசை மிக அதிகமாக உள்ளது. இத்தகைய இளைஞர் சக்தியை நாம் முறையாக சரியான வழியில் பயன்படுத்தினால், நாடு இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளை, சவால்களை எளிதாக சமாளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக