Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி


"ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமையும் வழங்க வேண் டும்,'' என, துணை ஜனாதிபதி, ஹமித் அன்சாரி கூறினார்.

டில்லியில் நடந்த தேசிய வாக்காளர் நாள் விழாவில், அன்சாரி பேசியதாவது:கடந்த, 60 ஆண்டுகளில், 15 லோக்சபா தேர்தல் களையும், 350 மாநில சட்டசபை தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.ஓட்டளிப்பது அனைவரின் கடமை. அனைவரும் ஓட்டளிப்பதில்லை என்பது வருத்ததற்குரியது. ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதிக பெரும்பான்மை பெற்றவர் மட்டுமே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், வெற்றி பெற்றவர் களில் பலர், மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெறுகின்றனர்.

தனக்கு விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்யும் வாக்காளர், அவரின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரை நிராகரிக்கவும் வேண்டும். அதுபோல, வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என, தெரிவிக்கும் உரிமையும் வழங்க வேண்டும்.இவ்வாறு ஹமித் அன்சாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக