Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 3 ஜனவரி, 2013

திருநெல்வேலி போஸ்ட் ஆபீசில் சூரிய ஒளி லாந்தர் விளக்குகள் விற்பனை


திருநெல்வேலி போஸ்ட் ஆபீசில் சூரியஒளி லாந்தர் விளக்குகள் விற்பனை துவங்கியது.

நாடு முழுவதும் முக்கிய போஸ்ட் ஆபீஸ்களில் சூரியஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது. இதற்காக சூரியஒளி சார்ஜர் விளக்குகள் தயாரிக்கும் கம்பெனியுடன் அஞ்சல்துறை ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது.

நெல்லை ஸ்ரீபுரம் போஸ்ட் ஆபீசில் டி-லைட் எஸ். 300, எஸ். 20 ரக சூரிய லாந்தர் சார்ஜர் விளக்குகள் விற்பனை நேற்று துவங்கியது. அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் சாந்தக்குமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உதவி கண்காணிப்பாளர் செல்வராஜ், தபால் அதிகாரி கடற்கரையாண்டி, வணிக அதிகாரி கனக சபாபதி கலந்து கொண்டனர்.

டி.லைட் எஸ். 300 சூரியலாந்தர் விளக்கை 8 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால் 4 அடுக்கு முறையில் போதிய வெளிச்சம் தரும். இதன் மூலம் மொபைல் போனை சார்ஜ் செய்யலாம். எங்கும் எளிதாக எடுத்து செல்லாம். இதன் விலை ரூ. 1,699.

டி.லைட் எஸ். 20 சூரியலாந்தர் விளக்கு அரிக்கேன் விளக்கு மாடலில் வடிவமைக்கப்பட்டது. 8 மணி நேரம் சூரியஒளி சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வெளிச்சம் தரும். 2 நிலை வெளிச்சம் தரும். 50 ஆயிரம் மணி நேர ஆயுள் கொண்டது. இதன் விலை ரூ. 549. இரு விளக்குகளும் அமெரிக்க வடிவமைப்பு கொண்டது. 2 ஆண்டு வாரண்டி உண்டு.

சூரியஒளி அறவே இல்லாத காலங்களில் செல்போன் சார்ஜர் மூலம் விளக்குகளை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த விளக்குகள் போஸ்ட்ஆபீஸ்களில் மட்டும் விற்பனை செய்யப்படும். விளக்குகளுக்கு தேவையான ஸ்பேர் பாகங்கள் போஸ்ட் ஆபீசில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அஞ்சல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
விற்பனை துவங்கிய சிறிதுநேரத்தில் ஏராளமானோர் சூரியஒளி சார்ஜர் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக