Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 5 ஜனவரி, 2013

பத்து வயது சிறுமியை ஓராண்டாகபலாத்காரம் செய்த சுகுமார் என்ற கிழடன் கைது

கேரளா மாநிலம் மூணாறு அருகே, பத்து வயது சிறுமியை கடந்த ஓராண்டாக, பலாத்காரம் செய்து வந்த கிழடனை  , போலீசார் கைது செய்தனர்.

கேரளா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவன் , சுகுமார், 62. சிறிய கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகில் வசிக்கும், பத்து வயதான, ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, மிட்டாய் உட்பட இனிப்பு வகைகளை கொடுத்து, ஏமாற்றி கற்பழித்துள்ளா.

சிறுமியின் தந்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, தாயார் கூலி வேலை செய்து வருகிறார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிலும், கடையிலும் வைத்து, கடந்த ஓராண்டாக, சுகுமார் கற்பழித்து வந்துள்ளான் .இது குறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் வரவே, அவர்கள்சிறுமியை அழைத்து விசாரித்தபோது உண்மை என, தெரியவந்தது. இக்குழுவினர் கொடுத்த புகார்படி,வெள்ளத்தூவல் போலீசார், சுகுமாரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக