Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பனிமூட்டத்தால் உறைந்தது ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு


குளிர்கால மலர்க்கண்காட்சியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஏற்காட்டில் இதுபோன்ற ஜில்..ஜில்.. சீசனை அனுபவித்ததில்லை என சென்னையை சேர்ந்த இளம்பெண் தெரிவித்தார்.

படகு சவாரிக்கு அனுமதி இல்லை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று ஒருநாள் மட்டும் 2–ம் பருவமாக குளிர்கால மலர்க்கண்காட்சி மற்றும் கலைவிழா நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்யும் வகையில் நடத்தப்பட்ட மலர்க்கண்காட்சிக்கு சென்னையில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்றைய தினம் ஏற்காடு பனிமூட்டத்தால் திண்டாடியது என்றே கூறலாம். எதிரே 10 அடி தூரத்திற்கு மேல் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கொள்ளாதபடி பனிமூட்டமும், மேககூட்டமும் ரோட்டில் பரவி இருந்தது. லேக் எனப்படும் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்ய முடியாத வகையில் ஏரி முழுவதும் பனிமூட்டம் பரவி வியாபித்து இருந்தது. இதனால் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுபோல ஏற்காடு பஸ் நிலையம், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா கார்டன் பகோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், பொட்டனிக்கல் கார்டன் ஆகிய இடங்களிலும் பனிமூட்டமாக காணப்பட்டது.

வாகனங்கள் முகப்பு விளக்கு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 15–வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 20–வது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்கள் பனிமூட்டத்தால் வாவ்... என்ன ஒரு சீசன் எனக்கூறி உறைந்து போயினர். சிறுவர், சிறுமிகள் முன் எச்சரிக்கையாக சுவெட்டர் அணிந்து வராததால் அவர்கள் வாய் குளிரில் டக்..டக்கென ‘தந்தி‘ அடிக்க தொடங்கின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக