Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 12 டிசம்பர், 2012

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை


தமிழ்நாடு ஆசிரியர் நல நிதி தேசிய நிறுவனத்திலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பின்ளைகளுக்கு 2012-13 கல்வியாண்டிற்கு படிப்புதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களும், விண்ணப்பிப்பதற்குரிய தகுதி ஆகிய விவரங்கள் www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

கல்வித்தகுதி: 
• விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் மகன்/மகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழிற்கல்வி பட்டப் படிப்பு (4 years), மூன்று ஆண்டு பட்டையப் டிபப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

• இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்தல் வேண்டும்)

• மனுவில் உள்ள அனைத்து காலங்களும் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

• பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,80,000க்குள் இருக்க வேண்டும். வருமானச் சான்று இத்துடன் இணைக்க வேண்டும்.

• விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும்.

• ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

• ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகள் மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆகியோர்களும் இப்படிப்புதவித் தொகைக்கு தகுதியானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக