Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்


பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருகிய பயிர்களுடன் நெல்லையில் விவசாயிகள் குவிந்தனர்.

நெல்லையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திருவேங்கடம் புதுப்பட்டி பகுதி விவசாயிகள் பலர் கருகிய நெற் பயிர்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதி விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் மக்கா சோளம், பருப்பு வகைகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் வாடி கருகி விட்டன.

வயல்களில் இரண்டு முறை விதை விதைத்தும் பயிராகி மகசூல் வருவதற்கு முன்பே பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்ளுக்கு அரசின் வறட்சி நிவாரண நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக