Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 டிசம்பர், 2012

அந்தரத்தில் மிதக்கும் கூண்டு படுக்கை


சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடற்கரை பகுதியில் குடில்கள் மற்றும் மரத்தின் மீது வீடுகள் அமைப்பது போன்ற யுக்திகள் கையாளப்படுகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த பெர்னி டூ பய்ராட் என்பவர் வித்தியாசமான கூண்டு படுக்கையை உருவாக்கி இருக்கிறார். இது பார்வைக்கு பெரிய பட்டுப்புழு கூடு அல்லது நெருப்பு கோழியின் முட்டை போல காட்சி தருகிறது.

அலுமினிய கம்பிகள், கயிறு ஆகியவற்றை கொண்டு தயாரித்து மரங்களில் கட்டி அந்தரத்தில் மிதக்க விட்டுள்ளார். இந்த கூண்டிற்குள் படுக்கை மெத்தை, தலையணைகள் இருக்கும். இளம் காதல் ஜோடி அல்லது ஒரு குழந்தையுடன் தம்பதி தங்கியிருக்கவும், படுத்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் இருக்கிறது.

இதை அமைக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் செலவாகும் என கூறும் பெர்னி, வரும் காலத்தில் சூரிய ஒளி, காற்று ஆகியவை மூலம் மின்சாரத்தை தயாரித்து ஏ.சி. வசதியை ஏற்படுத்த இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக