Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 1 நவம்பர், 2012

பெண்களுக்கு செல்போன் தடை :ராஜஸ்தான் மாநிலம் பண்டாரேஸ் மக்கள் பஞ்சாயத்தில் தீர்மானம்


படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவருக்கும் தகவல் தொடர்பினை செல்போன்கள் எளிதாக்கியிருந்தாலும், இதனால் பல்வேறு தர்மசங்கடங்களும் ஏற்படுகின்றன.

குறிப்பாக இளைஞர்களின் காதலை வளர்க்கும் கருவியாக செல்போன்கள் மாறிவிட்டதால்,  பெற்றோர்களைப் பொறுத்தவரை குடும்ப கவுரவத்தை அழிக்கும் ஆயுதமாகவே தெரிகிறது. இவ்வாறு சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதால் பெண்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு ராஜஸ்தானில் உள்ள ஒரு சமூக பஞ்சாயத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துஸா மாவட்டம் பண்டாரேஸ் நகரில் நன்கு படித்த ஒரு பெண், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை காதலித்து வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து பண்டாரேஸ் நகரில் உள்ள அனைத்து சமூகத்தையும் சேர்ந்த பெரியவர்கள் கொண்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

இதில் பெண்களுக்கு செல்போன்கள் வழங்கக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்தில் கிராம வாசிகள் கையெழுத்திட்டுள்ளனர். இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் செல்போன்களை கொடுத்து சுதந்திரமாக பேச விடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த உண்மையை கருத்தில் கொண்டு, பெண்கள் செல்போன்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது தங்கள் வீட்டு பெண்களுக்கு செல்போன்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொடுக்கலாம். ஆனால், ஒவ்வொருவரும் பஞ்சாயத்து தீர்மானத்தை பின்பற்றினால் நல்லது என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை ஒருவரும் புகார் அளிக்கவில்லை. அப்படி வந்தால் அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக