Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 24 நவம்பர், 2012

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் பகுதிகளில் நேற்று விடிய விடிய பெய்த தொடர்மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்திக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் அருவிகளில் சுமாராக தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் குற்றாலம் பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மெயினருவியில் ஆர்ச் பகுதியை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் செம்மண் நிறத்தில், சிறிய கற்கள், மரக்கட்டைகள், கிளைகள் போன்றவையும் விழுந்தது. இதனால் மெயினருவியில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.அருவிப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றலாம் கடை வீதி, பஜார் பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுற்றுலா பயணிகள்  அப்பகுதிக்கு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.பழைய குற்றால அருவி, புலியருவியிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்பு அருவிகளில் தண்ணீர் படிப்படியாக குறையத் துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக