Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஊதுபத்தி தொழிலில் பெருகும் வணிக வாய்ப்பு


பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -  ஊதுபத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு பெருகியுள்ளது.அதுமட்டுமின்றி, ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனங்களும், ஊதுபத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.இதனால், இந்நிறுவனங்களுக்கு, ஊதுபத்திகளை தயாரித்து தரும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.இந்தியாவில் ஊதுபத்தி சந்தையின் மதிப்பு, 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சாரா நிறுவனங்கள், பெரும்பான்மை பங்களிப்பை கொண்டுள்ளன.அமைப்பு சார்ந்த பிரிவில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு 7-8 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஊதுபத்திகளில் ஒன்றான, "மங்கள்தீப்' பிராண்டு ஊதுபத்திகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இந்திய ஊதுபத்தி சந்தையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி,12-13 சதவீதமாக உள்ளது."இதை விட, ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வளர்ச்சி, மும்மடங்காக உள்ளது' என, இப்பிரிவின் தலைமை செயல் அதிகாரி வி.எம்.ராஜசேகரன் தெரிவித்தார்.ஐ.டி.சி., நிறுவனம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 20 சிறிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து பெற்றுக் கொள்கிறது.இந்நிறுவனங்கள், மாதம், 70 கோடி ஊதுபத்திகளை, ஐ.டி.சி.,க்கு வழங்கி வருகின்றன. தற்போது, மேலும் 5-10 புதிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து, பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

எனினும், ஊதுபத்தி தயாரிப்பில் ஐ.டி.சி., கடுமையான தரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.ஐ.டி.சி.,க்கு ஊதுபத்திகளை தயாரித்து வழங்கும் சிறு நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், சிறந்த தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 9001-2000 தரச் சான்றிதழை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் சுயஉதவி குழுஇந்த வகையில், ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் முனைவோர் என, சமூகத்தில் பின்தங்கியுள்ள, 13 ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கிராமப்புற மக்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும் விதத்தில், ஒடிசா, திரிபுரா, அசாம் போன்ற மாநில அரசுகளுடன், ஐ.டி.சி., ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.நிலையான வருவாய் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவு சங்கங்களில், ஏராளமான ஊதுபத்தி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.வேளாண் தொழில் சார்ந்த, பின்தங்கிய ஊரகப் பகுதிகளில், விவசாய பொருட்களின் உற்பத் தியும், அது சார்ந்த வருவாயும் குறைந்து வரும் சூழலில், நிலையான வருவாய்க்கான தளத்தை உடனடியாக அமைப்பது அவசியம். அதற்கு, ஐ.டி.சி.,யின் ஊதுபத்தி பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக