Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 10 நவம்பர், 2012

வைகோவிற்கு நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை !

ம.தி.மு.க.வில் வைகோவை விமர்சித்து அதன் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று பேட்டி அளித்தார். இன்று அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மீண்டும் பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

ம.தி.மு.க.வில் 18 ஆண்டுகள் இயக்கத்தை கரை சேர்க்க ஆசா பாசங்கள் இல்லாமல் உழைத்த எனக்கு கட்சி தலைமையின் உத்தரவால் இந்த இழிச்செயல் ஏற்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. அவரைப்போல் நான் பாதுகாப்பு வளையத்திற்குள் வலம் வரவில்லை. சிலரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

எல்லோருக்கும் மரணம் வரலாம். மரணம் தான் உலகத்தில் நிரந்தரமானது. அது எப்போதும் வரும். எல்லோருக்கும் வரும். அது கட்சியின் ஏவல், கூவல்களால் எனக்கு வந்து விடுமானால் அதனை வரவேற்க தயாராக இருக்கிறேன். 

பரந்து விரிந்த தமிழ்ச் சமுதாயம் இந்த இழிநிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். என்னுடைய அடுத்தக் கட்ட முடிவுகள் எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதோடு இத் தமிழ்ச் சமுதாயம் மெச்சும் படியும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக