Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 ஆகஸ்ட், 2012

கோழிப்பண்ணை தொழிலுக்கு அரசின் தாராள உதவி


 புதிய கால்நடை மருந்தகங்கள், விவசாயிகள், சுயவிருப்பத்தில் கோழிப் பண்ணைகள், நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க, 28.35 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். தென்மாவட்ட விவசாயிகளும், காஞ்சிபுரம் உட்பட வட மாவட்ட விவசாயிகளும் கோழிப்பண்ணை அமைக்க, இந்தத் திட்டம் உதவிடும்.

மருந்தகம்! இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே, நடப்பாண்டில், 20 புதிய கால்நடை மருந்தகங்கள், ஆறு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என, இரு புதிய கோழி பண்ணை தொகுப்பு மண்டலங்கள் உருவாக்கப் படுகின்றன.

இந்த மண்டலங்களில், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அவர்கள் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப, 1,000 முதல், 5,000 கறிக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்ள வசதியாக, 20.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், 230 கோழிப் பண்ணைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

நாட்டு கோழி :திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்த, 2.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட, 35 பண்ணைகள் அமைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக