Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

செங்கோட்டையில் பலத்த மழை: குண்டாறு அணை நிரம்புகிறது

செங்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தென்காசி பகுதிகளான இலஞ்சி, பாவூர்சத்திரம், மேலகரம்மற்றும் செங்கோட்டை பகுதிகளான புளியரை, தெற்குமேடு, கட்டளைகுடியிருப்பு, சுப்பிரமணியபுரம், வல்லம், பிரானூர் பார்டர் ஆகிய பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. 

இந்த மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குண்டாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக