Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 19 ஜூலை, 2012

விறு விறுப்பாக ஓட்டுபதிவு :ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் பிரதிநிதிகள்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலையில் துவங்கியது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரணாப் முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுவதால், விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் டில்லியில் பார்லி., வளாகத்தில் தங்களின் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 31 இடங்களில் ஓட்ச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் மாநிலங்களிலும், எம்.பி.,க்கள் தங்களின் அனுமதிக்கேற்ப ஆங்காங்கே ஓட்டளித்து வருகின்றனர்.


 தமிழக எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை குழுக்கள் அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டுகள், அந்த அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன. இன்று காலை சீல் திறக்கப்பட்டு, ஓட்டு பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவு நடக்கும் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. அறையின் மையப் பகுதியில் ஒரு ஓட்டுப்பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.அதன் அருகே எம்எல்ஏக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய இரு மேஜைகள் போடப்பட்டு, அதில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப் பெட்டி அருகே பேரவை செயலாளர் ஜமாலுதீன் அமர்ந்திருந்தார். எம்எல்ஏக்கள் 2 வரிசையில் வந்து ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் 4 பேர் வாக்குப்பதிவை கண்காணிக்க வந்திருந்தனர். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி அறைக்கு வெளியே எம்எல்ஏக்கள் அமருவதற்காக 50 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. தேர்தலை நடத்தும் அதிகாரியான தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தேர்தல் பார்வையாளர் அஜித் குலாட்டி ஆகியோர் முன்னிலையில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரணாப் முகர்ஜியின் ஏஜென்டாக காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத்தும், சங்மாவின் ஏஜென்டாக அதிமுக கொறடா மோகனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 


முதல்வர் ஜெயலலிதா காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்திருந்தார். முதல் ஆளாக ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதிமுக லோக்சபா எம்.பி.க்கள் 9 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேரும் சென்னையில் ஓட்டு போட தேர்தல் கமிஷனிடம் முன்அனுமதி பெற்றிருந்தனர். அவர்கள் 13 பேரும் வாக்களித்தனர். 


திமுக தலைவர் கருணாநிதி காலை 11 மணிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 23 எம்எல்ஏக்களுக்கும் வாக்களித்தனர். 


தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பாராளுமன்ற பிரதிநிதி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் டில்லியில் பார்லி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார் .


ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஓட்டளிப்போரின் கை விரல்களில், அடையாள மை எதுவும் இடப்படாது. ஓட்டுச் சீட்டில், பிரணாப் முகர்ஜியின் பெயரும், சங்மாவின் பெயரும் இருக்கும். மக்கள் பிரதிநிதிகள், இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனரோ, அவர்களின் பெயருக்கு முன், 1 என்ற எண்ணை எழுதி, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான், ஓட்டளிக்க வேண்டும் என, எந்த ஒரு அரசியல் கட்சியும், தங்களின் பிரதிநிதிகளை கட் டாயப்படுத்த முடியாது என்பதால், எம்.எல்.ஏ.,க்களும். எம்.பி.,க்களும், சுதந்திரமாக ஓட்டளிக்கலாம். ஓட்டுப் பதிவு முடிந்ததும், பெட்டிகள் சீலிடப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்படும். வரும், 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக