Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 ஜூன், 2012

காஷ்மீர் சூஃபி தர்காவில் தீவிபத்து: போலீசார் பொதுமக்கள் மோதல்

காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சூஃபி தர்காவில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அளித்தும் தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதாகக் கூறி  பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வேறு தாமதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.




இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த மோதல்களில் 10 போலீசார் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக