Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 8 டிசம்பர், 2012

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி


களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை மற்றும் நம்பிகோயில் ஆறுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தலையணை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கிய பின்னரும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முண்டந்துறையில் நடந்தது. இதில் கலெக்டர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் களக்காடு வனப்பகுதியில் உள்ள தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று முதல் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர் தெரிவித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய தலைவர்


பாலஸ்தீனத்தின் தலைவர் களில் ஒருவரான காலீத் மெஷால், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

தங்கள் பகுதிகளை ஒப்படைக்கும் படி, பாலஸ்தீனத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகின் றனர். பாலஸ்தீன தனி நாடு தீர்மானம் சமீபத்தில் தான், ஐ.நா.,வில் நிறைவேற்றப் பட்டது. இஸ் ரேலுடன், நீண்ட நாட்களாக நடந்த சண்டையின் காரணமாக, ஹமாஸ் அமைப் பின் தலைவர் களில் ஒருவரான காலீத் மெஷால், 45 ஆண்டுகளுக்கு முன் குவைத்தில் தஞ்சம் புகுந்தார். ஈராக் போர் தொடுத்ததால், ஜோர்டானில் குடிபெயர்ந்தார்.

பாலஸ்தீனத்திற்கு நிதி திரட்டி வந்த மெஷாலை கொல்ல, இஸ்ரேலிய உளவு படையினர் திட்டமிட்டிருந்தனர். இதனால், அவர், கத்தார் நாட்டுக்கு சென்றார். பின், சிரியாவில் தஞ்சம் அடைந்தார்.ஹமாஸ் அமைப்பின் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக, 45 ஆண்டு களு க்கு பின், நேற்று அவர் காசாவுக்கு திரும்பினார். பாலஸ்தீன பிரதமர், அவரை வரவேற் றார். இன்று நடக்கும்  பேரணியில், காலீத் மெஷால் சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்நிய முதலீட்டின் மூலம் உண்மையான பசுமை புரட்சி : பிரதமர் மன்மோகன்


பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற எங்களது முயற்சிக்கு பஞ்சாப் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் சிறந்த ஆதரவு அளித்தன. அன்னிய முதலீடு, நமது விவசாயிகளுக்கும், நுகர்வோர்க்கும், நமது மக்களுக்கும் நிச்சயம் பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வும், விவசாய வளர்ச்சி 4 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடையவும், விவசாய துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் மேலாண் அனுபவங்கள் பெறவும் அன்னிய முதலீட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டின் மூலமாக விவசாயத்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்படும். கடினமாக உழைக்கும் பஞ்சாப் மற்றும் இதர மாநில விவசாயிகள், இதன் மூலமாக உண்மையான பசுமைப்புரட்சியையும், உணவு பாதுகாப்பையும் ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மோடிக்கு விசா இல்லை,தடை தொடரும் : அமெரிக்கா


 குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குஜராத்தில் கலவரத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டி மோடிக்கு விசா மறுப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

குஜராத் மாநிலத்துடன் வர்த்தக உறவு, முதலீடு, பல்கலைக்கழகங்கள் அளவிலான தொடர்புகள் தொடரும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா என்ற கேள்வியை இந்திய அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றார் மார்க் டோனர்.

எஃப்டிஐ விவகாரம்: தொடர்ந்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது தொடர்பாக நிலவும் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, எனவே எஃப்டிஐ குறித்து அங்குள்ள அனைவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யவும், பொருளாதார நன்மைகளை அளவிடவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வியாழன், 6 டிசம்பர், 2012

ஓராண்டாக முடங்கி கிடக்கும் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம்


இயந்திரம் பழுது காரணமாக, குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரை பழுது நீக்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, 101 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின், மொத்த உற்பத்தி திறன், 516 மெகாவாட். இவற்றில், நாகை மாவட்டம் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், 101 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரே யூனிட் உள்ளது. இந்த யூனிட்டில், கடந்தாண்டு மின் உற்பத்திக்கான இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாகியும், இதுவரை பழுதான இயந்திரத்தை மாற்ற, மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், 101 மெகாவாட் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

 குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலைய, இயந்திரம் பழுதாகவில்லை; மாறாக, வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலைய,"ஜெனரேட்டர்' தான் பழுதாகியது. குத்தாலம் நிலையத்தில் உள்ள, "ஜெனரேட்டரை' எடுத்து, வழுதூர் நிலையத்தில் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக, குத்தாலம் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும், மின் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். குத்தாலம் மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயுவை, தனியார் நிறுவனத்திற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதே, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றும், வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏ.கே. அந்தோணி துறையிலிருந்து ஆறு ஆண்டுகளில் 700 விஞ்ஞானிகள் ஓட்டம்


கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 700 விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்படும் டிஆர்டிஓ என்றழைக்கப்டும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை என்ற அமைப்பில் கடந்த‌ 2007முதல் 2011-ம் ஆண்டு வரையில் சுமார் 637 விஞ்ஞானிகளும் , இந்தாண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி வரையில் சுமார் 50 வி்ஞ்ஞானிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களில் கிடைக்கும் அதிக வருவாய் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து சென்றதாக அவர் தெரிவித்தார் .

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் டிஆர்டி ஓ அமைப்பானது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த போதிலும் பாதுகாப்புத்துறை யுடன் இவ்வமைப்பு இணைந்து செயல்படுவதால் மற்ற நிறுவனங்களை போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என கூறினார். மேலும் அமைச்சர் கூறுகையில் விஞஞானிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் பணிபுரியும் இடத்தினருகே வசிப்பதற்கு ஏற்ற வீடு, பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு போன்ற‌ைவை வழங்கப்படுகிறது. என தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 700 விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்படும் டிஆர்டிஓ என்றழைக்கப்டும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை என்ற அமைப்பில் கடந்த‌ 2007முதல் 2011-ம் ஆண்டு வரையில் சுமார் 637 விஞ்ஞானிகளும் , இந்தாண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி வரையில் சுமார் 50 வி்ஞ்ஞானிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களில் கிடைக்கும் அதிக வருவாய் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து சென்றதாக அவர் தெரிவித்தார் .

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் டிஆர்டி ஓ அமைப்பானது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த போதிலும் பாதுகாப்புத்துறை யுடன் இவ்வமைப்பு இணைந்து செயல்படுவதால் மற்ற நிறுவனங்களை போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என கூறினார். மேலும் அமைச்சர் கூறுகையில் விஞஞானிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் பணிபுரியும் இடத்தினருகே வசிப்பதற்கு ஏற்ற வீடு, பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு போன்ற‌ைவை வழங்கப்படுகிறது. என தெரிவித்தார்.

புதன், 5 டிசம்பர், 2012

இலவச லேப்டாப் திட்டம்: தமிழக பள்ளி கல்வித்துறை பாரபட்சம்?


தமிழக அரசு லேப்டாப் வழங்குவதில்  பாரபட்சத்தோடு நடந்துகொள்வது ஏற்புடைதல்ல என பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் நலனுக்காக சுயநிதி வகுப்புகள் செயல்படுகின்றன. அரசு ஒப்புதலின் பேரில் துவங்கப்படும் இப்பிரிவுகளுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் கிராம கல்விக்குழு உதவியுடன் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் (2011-12) 9.16 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை பட்டியல் வெளியிட்டது. இதற்காக 319 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் மிகுந்த தாமதத்திற்கு பிறகு தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் லேப்டாப் வினியோகிக்கப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இப்பணிகளை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் சேகரிக்கப்பட்டு பள்ளி கல்வி இயக்குநரகத்திற்கு கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அரசு பள்ளி சுயநிதி பிரிவு மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 65 அரசு பள்ளிகளில் 9,363 மாணவர்களும், அரசு உதவி பெறும் 30 பள்ளிகளில் 5,810 மாணவர்களும், நலப்பள்ளி ஒன்றுக்கு 40 மாணவர்களும், 4 நகர மைய பள்ளிகளுக்கு 1,117 மாணவர்களும், 16 மாநகராட்சி பள்ளிகளுக்கு 2,587 மாணவர்களும் என மொத்தம், 18,917 மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

கடந்த ஆண்டு ஒரு சில மாவட்டங்களில் சுயநிதி பிரிவு பள்ளி மாணவர்கள் பெயர் சேர்க்கப்பட்டும் , ஒரு சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கு அரசின் பிற நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலையில், லேப்டாப் மட்டும் மறுக்கப்படுவது கேள்விக்குரியது.

இதுகுறித்து, கோவை மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "நடப்பாண்டில் லேப்டாப் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை பட்டியலில், சுயநிதி பரிவு மாணவர்களின் பெயர்கள் சேர்க்கவேண்டாம் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததால் நாங்கள் சேர்க்கவில்லை. இந்த மாணவர்களும் பின்தங்கிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கும் கிடைத்தால் பயனடைவார்கள்,  என்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்கள் பாரதி, லதா மற்றும் சரவணன் கூறுகையில், "கடந்த ஆண்டு எங்கள் பிரிவில், படித்த சீனியர் மாணவர்களுக்கு லேப்டாப் கிடைத்தது. ஆனால் எங்களின் பெயர்கள் தற்போது பட்டியலில் இடம் பெறவில்லை. நாங்களும் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் தான். 'எங்களை மட்டும் ஒதுக்குவது ஏன் என்று புரியவில்லை' என்றனர்.