Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 25 ஆகஸ்ட், 2012

அரசுத்துறைகளில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன


சென்னையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தெற்கு மண்டலம் சார்பில், ஆங்கில மொழி மற்றும் அதனை புரிந்துகொள்ளுதல் தொடர்பான வினா வங்கி கருத்தரங்கம் நடைபெற்றது. 
 
நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசியதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் 55 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். இதனை முற்றிலும் ஆன்லைன் ஆக்குவதற்கு படிப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வெப்சைட்டில் விடைகளை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
 
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் உள்ளது. இதனை பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள திறமையான பணியாளர்களை பெற முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் சில பேப்பர்களை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கிறோம். இங்கு மட்டும் ஏன் பெறக்கூடாது? கொள்கை அளவில் இதனை ஒப்புக்கொண்டுள்ளோம். இதன்மூலம் கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு நன்மை ஏற்படும்.
 
அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம்


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித் தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாமில் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் நிவாரண குழுவினர் 250 முகாம்களில் தங்கி இருப்பவர்களிடம் நேரடி விசாரணை


சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தின்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந் தித்து துயர் துடைக்கும் பணி யில் ஈடுபட அமைக்கப்பட்ட குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது தலைமையில் முதல் நாளாக நேற்று 250 முகாம்களில் தங்க வைக் கப்பட்டி ருப்பவர்களிடம் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறிய குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து உடனடி யாக தக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி கூறினார் கள்.

அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநிலச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தேசியச் செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உ.பி. மாநிலத் தலைவர் டாக்டர் மதீன், மும்பை மாவட்டச் செயலாளர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான் ஆகியோர் 23-8-2012 அன்று காலை அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தி சென்றனர். விமான நிலையத் தில் அஸ்ஸாம் மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வர வேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு விமான நிலையத்தி லிருந்து நேரடியாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக் கப்பட்டுள்ளவர்கள் தலைநகர் குவஹாத்தியில் முகாமில் தங்கியிருப்பவர்கள் முதலில் சென்று பார்த்து விபரங்கள் கேட்டனர். குவஹாத்தியிலி ருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள துப்ரி மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு 250 முகாம் களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு முகாம்களில் பாதிக் கப்பட்டவர்களிடம் விசாரிக்கும் போது அவர்களது அவலக்குரல் குழுவினருக்கு கண்ணீரை வர வழைப்பதாக இருந்தது. அனைத்து சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தினக் கூலிகளாக வேலை செய்யும் ஏழை முஸ்லிம்களை திட்ட மிட்டே தாக்கப்பட்டதும், அவர் கள் செய்வதறியாமல் நிராயுத பாணியாக்கப்பட்டிருப்பதும் வேதனையளிக்கக்கூடிய செய் தியாகும்.

தேசியத் தலைவர் இ.அஹ மது தiமையிலான குழு முகாம் களில் தங்கியிருந் தவர்களை சந்தித்து முழுமையான தகவல் களை பெற்றபின், துப்ரி மாவட்ட ஆட்சியர் குமந் சரன் காலிதா, குவஹாத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்வின் அக்னி காத்ரி, மாவட்ட காவல் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி, தாசில்தார், வருவாய் அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாதிக்கப் பட்டவர்களின் குறைகளை எடுத் துக்கூறி உடனடி நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி னர். மாவட்ட அதிகாரிகள் கீழ்மட்டத்தில் உள்ள அரசு அலு வலர்களுக்கு தேவையான நட வடிக்கை எடுக்க உத்தரவிட்ட னர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு இன்றும் (24-8-2012) நாளையும் அஸ்ஸாமில் முகா மிட்டு அஸ்ஸாம் மாநில கவர்னர், முதல்வர், அமைச்சர் கள் மற்றும் மாநில அதிகாரிகளை நேரில் சந் தித்து நிவாரணப் பணிகள் துரி தப்படுத்த வலியுறுத்துகின் றனர்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடெங்கிலும் வசூல் செய்து வரும் அஸ்ஸாம் நிவாரண நிதியை, முதல் தவணையாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குகின்றனர். தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹமது டெல்லி திரும்பியதும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து அஸ்ஸாம் நிலவரம் குறித்து எடுத்து கூற இருக்கின்றார்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சிரியா :அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை


நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை  சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அதன் பிறகு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்காவிற்கு எதிராக கூறியதாவது,
 
ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும்.
 
சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரி ஜமிளுடன் பேசியுள்ளேன். உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார்.
 
இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
 

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - ஜெனடிக் கவுன்சிலிங்


வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம்(Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்: மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்: மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி: ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.

கடையநல்லூர் அருகில் சேர்ந்தமரத்தில் வறட்சியால் வாடும் மரக்கன்றுகள் :லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்


சேர்ந்தமரம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளது. இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள சேர்ந்தமரம் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள சேர்ந்தமரம் வீரசிகாமணி, திருமலாபுரம், தன்னூத்து, குலசேகரமங்கலம், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், ஆனைகுளம், வெள்ளாயன்குளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டும், கிணறுகளில் தண்ணீரின்றி வற்றியும் காணப்படுகிறது. 

 இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.தென்னை மரங்கள் அழியும் அபாயத்திலும், பல நூறு ஆண்டு பலன் தரும் பனை மரங்கள் கூட வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என காட்சிதரும் இப்பகுதி விவசாய நிலங்கள், தற்போது வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறியுள்ளது. மேற்கு தொடச்ச்சி மலையில் உள்ள கருப்பாநதியின் பாசன நீர் கிடைக்காதது இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். உரிய நீர் ஆதாரமின்றி நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. 

   சுமார் 300 மற்றும் 500 அடி ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் பயிரிட்டுள்ள மா, தென்னை, தேக்கு மரக்கன்றுகளை காப்பாற்ற வெகு தொலைவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். விவசாயிகளின் இந்த அவலநிலையை போக்க எதிர்காலத்தில் கருப்பாநதி அணை நீரை பகிர்ந்தளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் பெற மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துயர்துடைக்கும் பணி தீவிரம்

அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த கலவ ரத்தின் போது பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதற்கு ஏற்ப, நாடு முழுவ தும் திரட்டப்பட்ட நிதியுடன்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் குழுவினர் வருகிற 23-ந் தேதி (வியா ழன்) அஸ்ஸாம் மாநிலம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறி, அமைதிப்படுத்தி, நிவா ரண நிதியையும் வழங்குகி றார்கள்.

ஆகஸ்ட் முதல் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அஸ் ஸாமில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவி கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அமைதி திரும்ப போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. 

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அஸ்ஸாம் கலவர நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் `ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வங்கி கணக்கு துவக்கப்பட்டது.

ரமலானில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டது.

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஈத் பெருநாள் தொழுகைக்குப் பிறகு நிதி திரட்ட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லிக்   தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டு கோள் விடுத்திருந்தார். இதற்கு அனைத்து ஜமாஅத்தினரும், ஜமாஅத்துல் உலமா சபையும் முழு ஒத்துழைப்பு தந்து உற் சாகம் அளித்தனர். 

எதிர்வரும் வெள்ளிக்கி ழமை 24-8-2012 அன்று ஜும்ஆ தொழுகை அன்றும் நிதி சேகரித்து அன்று வரை உள்ள நிதியை வங்கியில் செலுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

அஸ்ஸாம் மக்களின் நிவாரணப் பணிகளை முறைப் படுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியச்செய லாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் 20-8-2012 அன்று அஸ்ஸாம் தலைநகர் குவஹாத் திக்கு விரைந்துள்ளார். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் மாநில அமைப்பாளர் திலிர்கான், அஸ்ஸாம் பார் பெட்டாவைச் சேர்ந்த முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிராஜுல் ஹக், வழக்கறிஞர்கள் ஹாபிஜ் ரஷீத் அஹமது சவுத்ரி, நஜ்ருல் ஹக், ரபி அஹமது, லத்தீப்புல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய மைச்சருமான இ.அஹமது, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் ஆகியோர் 23-8-2012 அன்று அஸ்ஸாம் சென்று மக்களை நேரில் சந்தித்து அமைதிப் படுத்த இருப்பதோடு நாடெங் கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திரட்டப் பட்ட நிதியை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குகின்றனர். 

நிவாரண நிதி திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் முஸ்லிம் லீக் குழு மீண்டும் அஸ்ஸாம் சென்று நிவாரணப் பணி மேற்கொள்ளும்.