Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 22 ஜூலை, 2012

நாட்டு மக்களுக்கு நன்றி :பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி, டெல்லியில் தன் வீட்டுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர், ‘’நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறேன். எனக்கு பாசமும், ஆதரவும் அளித்த அனை வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன்.

அப்போது, மக்களிடையே கண்ட உணர்வுகளை பார்த்த போது, இது ஜனாதிபதி தேர்தல் அல்ல, பொது தேர்தல் போன்று காணப்பட்டது. நான் மக்களுக்கு கொடுத்ததை விட அதிகமாகவே திரும்பப் பெற்றுள்ளேன்’’ என்று கூறினார்.

டெல்லி அக்பராபாத் மஸ்ஜிதிலிருந்து புனித குர்ஆன் பிரதிகள், மிம்பர் அகற்றம் : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் ஜமாத்தினருடன் சந்திப்பு

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சுபாஷ் பார்க் பகுதியில் உள்ள அக்பராபாதி மஸ்ஜிதில் இருந்து வட டெல்லி மாநகராட்சி அதி காரிகளும், காவல்துறையின ரும் புனித குர்ஆன் பிரதிகளை யும் குத்பா பிரசங்கம் செய்யும் மிம்பரையும அகற்றியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக் களிடம் குறைகளை கேட்ட றிந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதில் பழங்கால பொருட் கள் பல கண்டெடுக்கப்பட்டதா கவும், அவை குறித்து ஆய்வு நடத்த அந்த பொருட்களை கைப்பற்றி தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் ஒப் படைக்க வேண்டும் என்றும் அதற்காக மஸ்ஜித் பகுதியை காவல்துறையினரின் உதவி யுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் வட டெல்லி மாநகராட்சிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு இணங்க காவல்துறை அதிகாரி களும், வட டெல்லி மாநகராட்சி அலுவலர்களும் அக்பராபாதி மஸ்ஜித் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனர். பொருட்களை கைப்பற்றுவதற்கு வசதியாக அந்த பகுதி முழு வதையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து காவல் வளை யத்தை ஏற்படுத்தினர்.

புனித குர்ஆன் பிரதிகள்

அதன் பிறகு காவல்துறையி னர் நடந்து கொண்ட விதம் குறித்து மாதியா மஹால் சட்ட மன்ற உறுப்பினர் ஷுஐப் இக்பால் கூறியதாவது:

அந்த மஸ்ஜிதின் இடிபாடு களை பாதுகாக்க வேண்டும் என்றும், அதில் புதிய மஸ்ஜிதை உருவாக்க வேண்டும் என்றும் நான் கோரி வருகின்றேன். இந் நிலையில், உயர்நீதிமன்றம் பழமை வாய்ந்த இடுபாடுகளை ஆய்வு செய்வதற்கு தொல்லி யல் துறைக்கு அனுப்ப வேண் டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், காவல்துறையின ரும், மாநகராட்சி அலுவலர் களும் அத்துமீறி நடந்து மஸ்ஜி தில் இருந்த 50-60 புனித திருக்குர்ஆன் பிரதிகளையும், அந்த மஸ்ஜிதின் இமாம் குத்பா பிரசங்கம் செய்துவந்த மிம் பரையும் மற்றும் பொருட்களை யும் கைப்பற்றி சென்றிருக்கின் றனர்.

காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்துவ தாக கூறி அந்த இடத்தை சுற்றி வளைத்திருக்கிறார்கள். சுபாஷ் பார்க் பகுதி முழுமையுமே காவல் வளையம் போட்டிருக் கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எந்த பொருட்களை மஸ்ஜித் பகுதியில் இருந்து எடுத்துச் செல்கின்றனர் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த 3 வாரங்களாக முஸ் லிம்கள் அங்கு தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மஃக்ரிப் தொழுகை நடத்தவும் திட்ட மிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது. இது முஸ்லிம் களிடையே கோபத்தையும், கொந்தளிப் பையும் ஏற்படுத்தி விட்டது.

இவ்வாறு சட்டமன்ற உறுப் பினர் ஷுஐப் இக்பால் கூறினார்.

பதற்றம்

மஸ்ஜிதில் இருந்து காவல் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் புனித பொருட்களை எடுத்துச் சென்ற தால் அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் சுபாஷ் பார்க் பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள். சிறிய அளவில் கல்வீச்சு நடந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நிலவரம் குறித்து டெல்லி மத்திய கூடுதல் காவல்துறை ஆணையர் தேவேஷ் ஸ்ரீ வத்ஸவா கூறுகையில், சனிக் கிழமை பிற்பகலில் சுபாஷ் பார்க் பகுதியில் ஏராளமான முஸ்லிம் கள் குழுமினர். ஆனால் நீதி மன்ற உத்தரவின்படி அவர்கள் மஸ்ஜித் பகுதிக்குள் அனுமதிக் கப்பட வில்லை. பிற்பகல் 1 மணி யிலிருந்து 3 மணிவரை பதற்ற மான நிலை ஏற்பட்டது. முஸ் லிம்களுக்கும் காவல்துறை யினருக்கும் சிறிதளவில் தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை கட்டுக் குள் வந்து விட்டது என்றார்.

தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார்

நிலைமைய அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இப் பள்ளியையும், அதன் சுற்றுப் பகுதிகளையும், நேரில் பார்வை யிட்டார். 

முகலாயர் காலத்தில் கட்டப் பட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த மஸ்ஜித் சிப்பாய் களகத்தின் போது பிரிட்டிஷ் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. 

டெல்லி செங்கோட்டைக் கும், ஜாமிஆ மஸ்ஜிதிற்கும் இடையில் இப்பள்ளி அமைந்தி ருப்பதாலும், இதில் முஸ்லிம்கள் கூட்டம் நடத்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக திட்டங்கள் தீட்டியதாக கருதி பிரிட்டிஷ் ராணுவம் இந்த அழிப்பு முயற்சியை மேற்கொண்டது.

தற்போது 20 அடி ஆழத்தில் சிதைத்து கிடைக்கும் இந்த மஸ்ஜித் மெட்ரோ ரயில் பணி களின்போது கண்டறியப்பட் டது. 

பழம் பெருமை மிக்க இப்பள்ளியை புதுப்பித்து உருவாக்க வேண்டும் என்பதே அப்பகுதி முஸ்லிம்களின் கோரிக்கையாகும். முஸ்லிம்களின் உணர்வு களை டெல்லி மாநில அரசும், உயர்நீதிமன்றமும் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண் டும். இவ்வாறு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.

ஆசிரியர் நம்நாட்டின் 14 -ஆவது ஜனாதிபதி!

பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. 

இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று, பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார். 

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 748 எம்.பி.க்களில், 527 பேர் பிரணாப்புக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் சங்மாவுக்கு 206 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்குகளில் பிரணாப்புக்கு ஆதரவாக 5.58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மா 2.01 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். 

நாட்டின் 14-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜிதான் மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். 76 வயதான பிரணாப் வரும் 2017-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார்.



பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்., கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

பிரணாப், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களை பெற்றார். பிரணாப் கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்., கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 

பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 

2009ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூன் 15ம் தேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


சனி, 21 ஜூலை, 2012

நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களுடன் சமுதாயப் போர்வாள் சந்திப்பு





இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளரும் ,தமிழகத் தலைவருமான பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரகுமான் அவர்கள் நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் 

கல்வி விழிப்புணர்வு மாநாடு



தமிழகத்தில் இஸ்லாமிய கல்லூரிகளை உருவாக்கித் தந்த 


    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 
            கல்வி விழிப்புணர்வு மாநாடு 

           செப்டம்பர் 8 -2012 ,கும்பகோணம் ,
                                    அல்-அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் 

காங்கிரஸ் கட்சியின் சுயநலமும் பிடிவாதமும் :நாட்டில் குழப்பம்

மத்திய அமைச்சரவையில் 2வது இடம் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த சரத்பவார் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, ராஜினாமா செய்ததால் 2வது இடம் ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சரத்பவாரும் அமைச்சர் பிரபுல் படேலும் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று சந்தித்தார்.  சரத்பவார் தனது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பிரபுல் படேல் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் செயல்படும் விதம் குறித்து எங்களுக்கு சில அதிருப்திகள் உள்ளன. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் தெரிவித்துள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் ஆலோசித்து கட்சியின் முடிவு என்ன என்பதை திங்கட்கிழமை தெரியப்படுத்துவோம். அமைச்சரவையில் 2வது இடம் கிடைக்காததால் சரத்பவார் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுவது அபத்தமானது’’ என்றார். 

காங்கிரசுடன் மோதல் அதிகரித்துள்ளதால், அமைச்சரவையில் இருந்து விலக சரத்பவார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மன்மோகனுக்கும் சோனியா வுக்கு எழுதியுள்ள கடிதத் தில், ‘‘நாங்கள் சிறிய கட்சி என்பதால் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தவும் அதற்காக கவனம் செலுத்த வும் அதிக நேரம் தேவைப்படுகிறது’’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டம் சோனியா தலைமை யில் நேற்று ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், பேட்டியளித்த கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திவேதி, சரத்பவார் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் சமாதானம்

இதனிடையே, சரத்பவாரை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சரத்பவார் மதிப்பு மிக்க கூட்டணி கட்சி தலைவர். அவரது அறிவும் ஆற்றலும் அனுபவமும் மத்திய அரசுக்கு மிகப் பெரிய சொத்து’’ என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

துணை ஜனாதிபதியுடன் சமுதாயப்பிரதிநிதி சந்திப்பு




நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவந்த ஜனாதிபதி ,துணை ஜனாதிபதி தேர்தல்களில் நேற்று ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது .இந்நிலையில் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களின்  ஆலோசனையின் அடிப்படையில் ,துணை ஜனாதிபதிக்கான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஹமீது அன்சாரியை காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரகுமான் நேற்று சந்தித்து வாழ்த்துக் கூறினார் .