Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வனவிலங்கு பாதுகாப்பு படிப்பு (LIFE SCIENCE )


வனவிலங்குகளின் வாழ்வைப் பற்றிய அடிப்படை புரிதலை Life Sciences பாடம் வழங்குகிறது. அதேசமயம், கால்நடை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பில் துணை செய்கின்றன. பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்தப் பிறகு, இளநிலைப் படிப்பில், விலங்கியல், தாவரவியல், வனவளம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படிப்பது, இத்துறையில் நுழைவதற்கான ஒரு ஆரம்பம்.

பூகோள தகவல் அமைப்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் புள்ளியியல் போன்றவை, மிருகங்களை கண்காணித்தல் மற்றும் கணக்கெடுத்தல் போன்ற பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நவீன அம்சங்களாக திகழ்கின்றன. The wildlife institute of Inida(WII), National centre of biological sciences(NCBS) போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலை போன்ற சில முக்கிய பல்கலைகள், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகள் Landscape ecology, Remote sensing and Conservation genetics போன்ற தொழில்நுட்பங்களை இணைக்க முயல்கின்றன.

NCBS கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் M.Sc in wildlife biology and conservation என்ற படிப்பானது, பெங்களூர் வனவிலங்கு படிப்புகளுக்கான மையத்தின்(CWS) கூட்டிணைவோடு வழங்கப்படுகிறது மற்றும் பட்டமானது, அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரிலுள்ள Ashoka trust for research in ecology and the environment, Nature conservation foundation and National institute of advanced studies போன்ற கல்வி நிறுவனங்களும், இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகின்றன.


தகுதிகள் மற்றும் சேர்க்கை
NCBS கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையானது, தேசிய அளவிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் நடைபெறுகிறது. பலவிதமான படிப்பு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை சேர்ப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் ஆகியோர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

WII கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கை சற்று மாறுபட்டது. உயிரி அறிவியலை முக்கிய பாடமாக வைத்து, பி.எஸ்சி முடித்தவர்கள் அல்லது கால்நடை அறிவியல், வனவளம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCBS -ஐ பொறுத்தவரை, 2 வருடங்களுக்கு ஒருமுறையே அந்தப் படிப்பு வழங்கப்படுகிறது மற்றும் சேர்க்கைக்கான விளம்பரம், படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது. மேலும், மாதம் ரூ.10,000 உதவித்தொகையும் NCBS மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்குமிட வசதியும் உண்டு.

இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதும் சுவாரஸ்யமான ஒன்று. இதன்மூலம் ஒருவரின் அறிவு விரிவடைவதுடன், பலவிதமான வாய்ப்புகளையும் ஒருவர் பெற முடியும். நமக்கு விருப்பமான தலைப்பில் பி.எச்டி செய்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.


பணிநிலைகள் மற்றும் துறைகள்
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் நுழைய பலவிதமான வழிகள் உள்ளன. இங்கே அவை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு ஜர்னலிசம் மற்றும் டூரிஸம்
வனவிலங்கு ஜர்னலிசம், இயற்கை போட்டோகிராபி அல்லது டாகுமென்டரிகளை தயாரிக்கும் அதிகளவு நபர்களை இந்தப் பிரிவு ஈர்க்கிறது. மீடியா திறனிற்கு அப்பாற்பட்டு, வனவிலங்கு தொடர்பான அம்சங்களை ஆராய்வதற்கான அறிவு மற்றும் ஆர்வத்தை இத்துறை கோருகிறது. மீடியாவைப் போலவே, வனவிலங்கு டூரிஸமானது, பல இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களின் விருப்பத்தையும், தொழிலையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

கார்பரேட் சமூக பொறுப்பு(சி.எஸ்.ஆர்/என்.ஜி.ஓ)
அழிந்துவரும் விலங்கினங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், என்.ஜி.ஓ -க்கள் பலவிதமான பணிகளை ஆற்றி வருகின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள், களப் பணியாளர்கள், மீடியா நபர்கள், Outreach பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு மற்றும் நுண்ணறிவு நெட்வொர்க் நிபுணர்கள் போன்ற பல பணி நிலைகளில் என்.ஜி.ஓ -க்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், வன அருகாமையிலுள்ள சில பாரம்பரிய வேட்டை சமூகத்திடமிருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை, வேட்டைக்கெதிராக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆராய்ச்சிப் பணி:அரசுகள், என்.ஜி.ஓ -க்கள், WII, NCBS, ATREE, NCF போன்றவை, வனவிலங்குகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. வனவிலங்கு அறிவியல் துறையில் முதுநிலைப் படிப்பை முடித்தப்பின்னர், மேற்கூறிய நிறுவனங்களில், பி.எச்டி மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவதுடன், Wildlife biologist மற்றும் Research associates போன்ற பணி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
அரசுப் பணிகள்:தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றவும், நிர்வகிக்கவும், மத்திய - மாநில அரசுகள், அலுவலர்களை நியமிக்கின்றன. இந்த அலுவலர்கள் பின்னாளில், வனவளம், வனவிலங்கு மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பட்டதாரி, இதுபோன்ற பணிகளில் இணைந்து, வனவிலங்கு பற்றிய தனது திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சில அரசுத்துறை பணியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "கன்சர்வேஷன் பயாலஜிஸ்ட் போன்ற ஒரு சில பணிவாய்ப்புகளே அரசுத்துறைகளில் உள்ளன. இதன்மூலம், வனவிலங்கு அறிவியலில் பயிற்சிபெறும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் சுருங்கி காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சட்டம்:வனவிலங்கு மற்றும் வனங்களைப் பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள், அதன்பொருட்டு தங்களின் சட்ட அறிவைப் பயன்படுத்தி சாதிக்கலாம். ஆனால் அதேசமயம், நீதிமன்றங்களில் வாதாட, சட்டப் படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:இத்துறையில் முதுநிலைப் படிப்பை முடித்து என்.ஜி.ஓ -வில் பணிக்கு சேரும் ஒருவர் ஆரம்பத்தில் ரூ.15000 முதல் 20000 வரை பெற முடியும். GIS நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அவரவர் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்தைப் பெறலாம். வனம் தொடர்பான பல பணிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூலம் பெறலாம்.
பல ஆர்வலர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். WII, NCBS போன்ற கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் பி.எச்டி பட்டங்களைப் பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன.
தேவைப்படும் பண்புக்கூறுகள்:இத்துறையில் ஈடுபடுவோர், வனவாழ்க்கைத் தொடர்பான சமூக, சுற்றுப்புற மற்றும் பொருளாதார காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு, சிறந்த தகவல்தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் இருக்க வேண்டும். அதேசமயம், தங்களின் பணி தொடர்பான உயரிய லட்சியத்தை, அவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதே இங்கு முக்கியம். அதுவே, உங்களுக்கான ஆத்ம திருப்தி!

புதன், 29 ஆகஸ்ட், 2012

இளைய தலைமுறையே! நம் சமுதாயத் தந்தையின் வாழ்க்கையை அறிந்துகொள் !


பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயிதே  களுக்குத்தான் பஞ்சம் !

ஓட்ஸ் - மருத்துவ குணம்


ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது.

இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது.  இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.

அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது

ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

சிங்கப்பூரில் படிப்பவர்களுக்கு செலவும், நேரமும் மிச்சம்


பொதுவாக, மேலாண்மை படிப்புகளுக்கு பெயர்பெற்ற சிங்கப்பூர், தற்போது பலதுறைகளில் படிப்புகளை வழங்கி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பாக, சிங்கப்பூரின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 70,000. ஆனால் அந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டின் முடிவில் 1,00,000 என்ற அளவிற்கு அதிகரித்தது.

வரும் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 1,50,000 என்ற அளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க திட்டங்கள்
மாறிவரும் உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல புதிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பார்த்தால், சிங்கப்பூர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலாச்சாரம், அமைப்பு மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றில் 4 வருட இளநிலை சமூக அறிவியல் படிப்பை வழங்குகிறது. மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்(NUS), ஆங்கில மொழியில், ஒற்றை மேஜர் பி.ஏ(ஹானர்ஸ்) 4 வருட படிப்பை வழங்குகிறது.

பி.பி.ஏ(அக்கவுன்டிங்) என்ற 5 வருட படிப்பானது, சிங்கப்பூரில் வழங்கப்படும் புகழ்பெற்ற படிப்புகளில் ஒன்றாகும். NUS, நிதி மற்றும் நியூ மீடியா துறையில் பி.பி.ஏ(ஹானர்ஸ்) இரட்டைப் பட்டப் படிப்பை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் பல பொறியியல் படிப்புகளை சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவைத்தவிர, பி.ஏ(எகனாமிக்ஸ்) மற்றும் பி.இ(எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய படிப்புகள், பொறியியல் கல்லூரி மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தால் கூட்டாக சேர்ந்து வழங்கப்படுகின்றன.


செலவினங்கள்
கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு பல்கலை வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதுபோன்ற பல்கலைகளால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் தாய்நாட்டு கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. சராசரியாக, சிங்கப்பூரில் பெறப்படும் வெளிநாட்டுப் பட்டம் 20% குறைவான பொருட் செலவில் கிடைக்கிறது. அதேசமயம், அது படிப்பையும், கல்லூரியையும் பொறுத்தது.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட ஜேம்ஸ் கூக் பல்கலையை உதாரணமாக எடுத்துக்கொண்டால், சராசரியாக, இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 40,000 சிங்கப்பூர் டாலர்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 28,000 சிங்கப்பூர் டாலர்களும் செலவாகிறது.

மேலும் காலமும் மிச்சமாகிறது. ஏனெனில், எம்.பி.ஏ படிப்பை எடுத்துக்கொண்டால், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும். அதேசமயத்தில், சிங்கப்பூரில் இதற்கு 1 வருடம்தான் ஆகும்.

வேலை வாய்ப்புகள்
சிங்கப்பூரை பொறுத்தவரை, முழுநேரமாக, பல்கலைகளிலும், பாலிடெக்னிக்குகளிலும், இதர கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவர்கள்தான் பகுதிநேர வேலைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வொர்க் பர்மிட் தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 16 மணி நேரங்களே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

படிப்பை முடித்தப்பிறகு ஒரு மாணவர், எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு, மனிதவள அமைச்சகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு, வேலை வாய்ப்பிற்கான inprinciple approval -ஐ நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஒருவர் பெறக்கூடிய சம்பளம் மாதத்திற்கு குறைந்தது 25000 சிங்கப்பூர் டாலர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே, எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுசு கூடும் மதுரை மல்லி


மதுரை மல்லிக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் மவுசு அதிகரித்து வருகிறது.மல்லிகை பூ வகைகளில், அதிக வாசனை கொண்டது மதுரை மல்லி. இது, மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், 1,250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மல்லிக்கான தேவை,ஆண்டுக்கு, 10,500 டன்னாக உள்ளது.ஆனால், இதன் உற்பத்தி,9,500 டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், மதுரை மல்லி அதிக அளவில் விளைகிறது. அப்போது, கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழை மற்றும் குளிர் காலத்தில், கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டில்லி மும்பை ஆகிய நகரங்களில், மதுரை மல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அயல்நாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.விலையில் ஏற்ற, இறக்கம், போதிய கிடங்கு வசதியின்மை, இடைத்தரகர்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளால், மதுரை மல்லி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, மதுரை மல்லி விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அற்புத தொழில் :வாழை நார் ஆடைகள் உற்பத்தி


சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.


''பருத்தி நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும் ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.
இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.

இந்த வாழை நார் ஆடை களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டோம். ''தமிழகம், குஜராத் பகுதிகளில் இந்த புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள பெரிய கடைகள் இதற்கான ஆர்டர்களை தந்து வாங்கிச் செல்கிறார்கள். தவிர, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும்  மாதத்திற்கு பத்தாயிரம் ஆடைகள் வேண்டுமென எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆர்டரை சப்ளை செய்கிற அளவுக்கு எங்களிடம் இடவசதி இல்லை.தவிர, பருத்தி நூல் போல இதனை எளிதில் தயாரித்துவிடவும் முடியாது. ஒவ்வொரு இழையாகப் பிரித்து, காய வைத்து, அதை நீளமான நூலாக மாற்றி, நெய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நீளமான நூலை உருவாக்கும் டெக்னாலஜி மட்டும் வந்து விட்டால், இன்னும் வேகமாக இந்த ஆடைகளை தயாரிக்க முடியும்'' என்றவர், இந்த தொழில்நுட்பத்துக்கான பேடன்ட் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.-யில் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.


''எங்களுக்கு போதிய இடவசதியை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால், இன்னும் அதிக அளவில் இந்த ஆடை களை உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்வோம்'' என்று கோரிக்கை வைத்தவர்,  தேங்காய் நார், மூங்கில், கடல் புல் போன்ற 25 வகையான இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகளை தயாரித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்!




தடையில்லா லாபம் வரும் காளான் வளர்ப்பு


 நாம் முன்னேற வேண்டு மானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இரு க்கிறது. அதிலும் சுயமாக முன் னேற நினைப்பவர்களுக்கு உதவுப வை சிறுதொழில்கள். அதிக முத லீடு இல்லாமல், விரைவில் தொ ழில் தொடங்க இத்தகைய சிறு தொழில்களே மிகவும் சிறந்தவை யாக இருக்கிறது. பாருங்கள்! சிறு தொழில் செய்து இப்போது நாட்டி ல் பலரும் பெரிய தொழிலதிபர்க ளாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளா ன் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர் காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிப ராக மாறிக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்ப தன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம்.

மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். கார ணம் அசைவ சுவைக்கு நிக ரான சுவை யைத் இது தருவதால்தான். மேலு ம் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்ப ர் போன்ற
தாதுச்சத்து க்களும் நிறைந்திருக்கின்ற ன.
உடலுக்குத் தேவையான சத்துக் கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கி யமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலே யே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.


காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்த து இந்த ரகங்கள் : வெள்ளைச் சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே .-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக் காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை.

காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரை வேய்ந்த சாதாரண வீடே போது ம். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந் தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளா ன் வளர்க்கவும் தேவைப் படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்ப நிலை:
 25-300 செல் சியசும் வெப் பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண் டும். அத்தோடு இந்த இரு அறைகளி லும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண் டும்.குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர் மா மீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shop களில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோ துமை, சோளம் ஆகியவை முக் கிய பொருள்களாக பயன்படுகி றது.
 மேற்குறிப்பிட்ட தானியங்க ளை அரை வேக்காடு வேக வை த்து காற்றில் உலர்த்த வேண் டும். அதனுடன் 2% சுண்ணாம்பு ம் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில் களில் நிரப்ப வேண் டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமி களை அழிக்க குக்கரில் அடு க்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியா க வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயது டைய காளான் வித்தை காளான் தயாரிப் புக்கு பயன் படுத்த வேண்டும்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச் சக்கை, உமி நீக்கிய மக்கா ச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீ ரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைக ளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப் பதம் இருக்கும்படி பார்த்துக் கொ ள்ள வேண்டும்.

காளான் பைகள் – படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திற ந்த பாலீத்தின் பைகளை பயன் படுத்த வேண்டும். இரு பக்க மும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதி யை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒரு புறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பை யை நன்றாக இறுக்கி கட்டி விட வேண்டும். இதற்கு ரப்பர் பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடி லினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழு வதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காண லாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையை க் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொ ண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
காளானை எவ் வாறு அறுவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்ப டும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண் ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறு வடை செய்துவிட வேண்டு ம். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்கள் விருப்பம் எது வோ அப்படி அறுவடை செய்து கொள்ளல லாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போ ன்ற பொருள் கொண்டு காளான் படுகை யை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்ல து பாலிதீன் பைகளின் நான்கைந்து துளை களை கூடுதலாக இட வேண்டும். ஒவ் வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன் பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600  கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க் கும் விற்கலாம். அருகில் உள் ள ஹோட்டல்களுக்கு கொடு க்கலாம். காளானைக் கொ ண்டு பல வித உணவுப் பொரு ட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக் கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக் கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இர ண்டு நாட்கள் வரைக்கும் வை க்கலாம். இரண்டிற்கு மேற்ப ட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழி லாக இருக்கிறது. வீட்டிலிருந் தபடியே நமது வருமா னத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகி றது.